Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

புதன், 7 ஏப்ரல், 2010

சாருவுக்கு

எனக்கு மிக விருப்பமான காமெடியர்களில் சாருவுக்கு எப்பொழுதுமே முக்கிய இடமுண்டு. தான் என்ன பேசுகிறோமோ அதற்கு எதிராக மட்டுமே செயல்படுவதும் எல்லாம் தெரிந்த அறிவுஜீவி தனமும் சேர்ந்து தன்னை எல்லோரும் வியப்பாகவே பார்ப்பதுபோல் இருக்கும் ஒரு ஆளை வேறு எப்படி சொல்வது. சினிமாவைப் பற்றி ஒரு சராசரி ரசிகனுக்கு இருக்கும் பிரக்ஞை கூட இல்லாமல் விமர்சனம் எழுதுவது நிச … Read More்சயமாக சாருவுக்கு மட்டுமே சாத்தியம்.சராசரி ரசிகனுக்கு எந்த claim மும் இருப்பதில்லை. நம்மாளுக்கு அப்படியா? நல்ல படம் என்றால் அதில் மூத்திரம் பெய்வதை காட்ட வேண்டும், அல்லது கள்ள உறவுகளை மட்டுமே முன்னிறுத்த வேண்டும், இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் சைக்கோதனமான கதையாக இருக்க வேண்டும். சமீபகால நிபந்தனை என்றால் ஒன்றுதான். நித்யானந்தாவை நாயகனாகவும் ரஞ்சிதாவை நாயகியாகவும் போட வேண்டும். அப்படியிருந்தால் மட்டும்தான் அது நல்ல படம். நீண்ட நாட்களாகவே நாயகனாக மட்டுமே நடிப்பேனென சாரு சொல்லிக்கொண்டு திரிவதை நினைக்கையில் அவருக்கான படங்களை எடுப்பவர்களிடம் இன்னும் அனுகவில்லையோ என்று தோன்றியது. இப்பொழுது நித்யானந்தரின் வீடியோ பார்த்த பின் மிக விரைவிலேயே சாரு கதாநாயகனாக நடிக்கும் படம் வெளிவரும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. முப்பது வருடமாக சமரசம் செய்யாமல் எழுதுகிறேன் என்று சிரிக்காமல் உங்களால் மட்டும்தான் சொல்ல முடியும் போங்கள். அங்காடித் தெரு உங்களுக்கு பிடிக்காமல் போனதற்கு நீங்கள் சொல்லும் மேம்போக்கான காரணங்களை வெளியில் சொல்லிப் பாருங்கள் காறித் துப்பிவிடுவார்கள். தொடர்ந்து நீங்கள் எழுதும் கேவலமான சினிமா விமர்சனங்களை படிக்கிறவன் என்கிற முறையிலும் கொஞ்சம் சினிமா பார்க்கிறவன் என்கிற முறையிலும் ஒன்று கேட்கிறேன். சினிமாவைப் பற்றின அடிப்படை பிரிதல் உங்களிடம் என்னவாய் இருக்கிறது. நீங்கள் வரிசையாக கொண்டாடி எழுதிய படங்களின் விமர்சனங்களை நீங்களே ஒரு முறை திரும்பப் படித்து பாருங்கள், ஆங்காங்கே நீங்கள் அள்ளித் தெளித்த மேதைகளின் பெயர்களும் அவர்களின் படங்களையும் தவிர்த்து திரைக்கதையைப் பற்றின புரிதல்களோ தொழில்நுட்பம் குறித்த பிரக்ஞையோ எதுவும் இல்லாத குப்பைகளாகத்தான் இருக்கும். அங்காடித்தெருவில் இருக்கும் நியாயமான விசயங்களை மறைத்து நீங்கள் எழுதுவதில் உங்களின் பெரு முதலாளி விசுவாசம் தெரிகிறது. உங்களின் ஆஸ்தான புரவலரும் ஜவுளிக்கடை முதலாளியாய் இருப்பதில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டுத்தான் ஆக வேண்டும், அதில் எந்த தவறும் இருக்கப் போவதில்லை சாரு. அதற்காக எழுத்திற்கு நேர்மையாக இருப்பதாக பச்சைபொய் சொல்லாதீர்கள். எழுத்தை நேசிக்கும் எவனும் உங்களை மன்னிக்க மாட்டான். நண்பர்களுக்கு ஒரேயொரு வேண்டுகோள்...யாராவது சினிமா ரசனை வகுப்பு எடுத்தால் தயவு செய்து சாருவை மாணவனாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக