Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஒரு பொறுப்புள்ள மனிதனாக மாறுவதற்கான ஆகச்சிறந்த பயிர்சிகளை பொருப்புள்ள தந்தைமார்களும் இன்னும் பொறுப்புள்ள ஆசிரியப் பெருந்தகைகளும், கூடுதலாக பொறுப்புள்ள நண்பர்களும் இன்னும் பொறுப்பான எவ்வளவோ உரவுக்காரர்கள் சதாவும் நினைவுபடுத்தும் நல்ல மனிதனாக வாழ்தலை அல்லது ஒழுக்கமான வாழ்வைப் பற்றின தங்களின் தொடர் பாடங்களில் எப்பொழுதும் அவர்கள் மற்ந்துவிடுவதுண்டு ஒழுக்கமாக வாழ்தலில் இருக்கும் துயரையும் பொய்மையையும்.
உண்மையில் நான் எழுதவிழைந்த விசய்ம் இதில் எதுவும் சம்மந்தப்படாதது. நீங்கள் அருவருப்பு கொள்கிற சொல்ல பேசத் தயங்குகிற எல்லாவற்றிற்குள்ளும் இருக்கும் அடிப்படையான உண்மைகளையும் அழகையும் பல சமயங்களில் உங்களால் புரிந்து கொள்ளாமலேயே போவது துரதிர்ஸ்டவசமானது. இருப்பின் அர்த்தங்களை விருப்பங்கள் தவிர்த்து பார்ப்பதில் எல்லாவற்றையும் பொய்யாகவே பார்த்துப் பழக இச்சமூகம் உங்களைப் பழக்கியிருக்கிறது.
நான் உங்களையென சேர்ப்பதில் தவிர்க்கவே முஇட்யாமல் சில சமயங்களில் நானும் சேர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மெது மெதுவாக பாம்பு தன் தோலுரித்துக் கொள்வதைப்போல் நம்மால் ஒழுக்கம் போர்த்தியிருக்கும் சட்டையைப் பிரித்தெடுக்க முடிந்தால் எவ்வளவு இலகுவாக இருக்கும். சதாகாலமும் யாரோவொருவரால் கண்கானிக்கப் படுவதான உணர்வு கொஞ்சம் அச்சத்தையும் அருவருப்பையுமே தருகிறது.
கடுமையான வேலை நெருக்கடியிலும் படிக்க நேர்ந்த என் காதலன் செல்மா பிரியதர்ஸ்னின் தெய்வத்தை புசித்தல் தொகுப்பில் படிக்க நேர்ந்த சில கவிதைகளும், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் தொகுப்பில் படிக்க நேர்ந்த சில கவிதைகளும் பெரும் ஆசுவாசம் தருகின்ரன. தமிழச்சியின் வெயில் ருசி பற்றின கவிதைகளில் வீட்டில் திண்பண்டம் கேட்கும் குழந்தைக்கு சில்லுக்கருப்பட்டியில் வழியும் வெயிலை எப்படி ருசிக்கக் குடுப்பது என்கிற நான்கு வரிகள் எங்கள் பகுதி எழுத்தாளர்கள் அவ்வளவு பேருக்குள்ளும் ஓடியிருக்கும் வெயில் குறித்து தீவிரமாக யோசிக்க வைக்கிறது. சீக்கிரத்தில் இப்புத்தகம் குறித்து விரிவாக எழுத வேண்டும். செல்மா எனது காதலன் என்பதால் அவனுக்கு எழுதுவது காதலுக்கு விசுவாசமாக இருப்பதற்காக எழுதியதாகி விடும். ஆக..எப்பொழுதும்போல் அவனுக்கு ஆயிரம் முத்தங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக