சூன்யத்தின் விரல்களுக்குள்
கரைந்து போகிறது காலம் ரேலை பிரித்து
அனாமத்தாய் வனம் சேரும்
முடுமரங்களின் வேர்களென
விருப்பங்கள் சொற்களாய்
நீண்டு கொண்டிருக்க்கின்றன நொடிதோறும்
இமைப் பிளவில் கசிந்த முதல் ஈரத்தில்
உறவின் சுழி உணர்ந்தேன்
தம் பாதையின் முடிவறியா
ஜிப்ஸியாய்
துயர் சுமந்தைந்தவனை
தயக்கமின்றி தம்பியாக்கிக் கொண்டாய்
சுமப்பதின் சுகம் உணர்ந்தபின்
சிலுவைகளின் கனம் தெரிவதில்லை
நீயின்னும் காணாத என அம்மாவும்
நானின்னும் காணாத உன் அம்மாவும்
நமக்கு அம்மாவான நாளில்
நாமிருவருமே மீண்டும் ஜனித்திருக்கிறோம்
பால்யமறியாத குழந்தையென
உன் உள்ளங்கைகளுக்குள்
சரணடைகிறேன்
நீ தொலைத்த உன் தம்பியாய்
நான் தேடிய அக்காவிடம்
ஞாயிறு, 16 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கண்ணுக்குத் தெரியாத அன்பால் கட்டுண்டு கிடக்கிறோம்.பிரதிபலன் பார்க்காத இதன் பால்வீச்சத்தின் தூய்மை உடையும் மனதை செதுக்கட்டும்
பதிலளிநீக்குஉனக்கான காத்திருப்பில்
பதிலளிநீக்குதொலைந்து போன நாட்கள் ஏராளம்,
ஆனாலும் இன்றாவது
அதைப் பெற்றுக் கொண்டேன்
என சந்தோஷிக்கிறேன்,
இழந்ததை எண்ணிக் கவலைப்படவில்லை....!
வரும் நாட்கள் வசந்தமாகட்டும்
அது ஒன்று போதும்.
அழகான கவிதை தம்பி.
அருமைடா லட்சுமி சுண்டல்..
பதிலளிநீக்குஉன்னை நினைத்தா பெருமையா இருக்கு..
உன் அன்புப் பணியும் .., தமிழ்ப் பணியும் தொடர என் வாழ்த்துக்கள்..
IM PROUD THAT YOU ARE MY BROTHER ....
வாழ்க வளமுடன்..
வாழ்க நலமுடன்..
பாஷு அக்காவின் ஆசியோடு சேத்து அம்மு அக்காவின் ஆசியும் உனக்கு..