Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

புதன், 17 பிப்ரவரி, 2010




ஆடு முட்டுச் சண்டை


இயந்திரத்தனமாகிப் போன வாழ்வின் கடந்தகாலங்களை நினைத்துப் பார்ப்பதென்பது பலருக்கு அனாவசியமானதொன்றாகவும், இன்னும் சிலருக்கு நினைத்துப் பார்த்து ஏக்கம் கொள்கிற அளவிற்கும்தான் இருக்கிறது, நாம் எழுதுகிற வாசிக்கிற எவ்வளவோ புனைவுகளை விடவும் ஆச்சர்யங்கள் கொண்டதாயிருக்கிறது. நம்மைக் கடந்து போகும் வாழ்க்கை மனிதர்களை பற்றின கதைகள் காலங்காலமாய் நம்மோடு பழங்கிக் கொண்டிருப்பவை தானென்பதும் அதன் எல்லைகள் எதுவரையிலுமானது என்பதும் வரையறுத்துச் சொல்ல முடியாததொன்று.


உங்களுடையது கிராமம் சார்ந்த வாழ்க்கை எனில் தவறாமல் நேர்ந்திருக்கும் செல்லப் பிராணிகள் வளர்த்த அனுபவம் நகர வாழ்விலும் இது காணக் கூடியதுதான் எனினும் அவ்வீடுகளிலிருக்கிற மேசை, நாற்காலிகளைப் போன்ற உயிரற்ற பொருட்களாகத்தான் இந்தப் பிராணிகளுமிருக்கின்றன. நிறைய ஆடுகளைப் பரமாரித்து வளர்த்து வரும் நண்பர் ஒருவருக்காக அவர் ஊர் சந்தையில் ஆடு வாங்கச் சென்றிருந்தோம். கொஞ்சம் விவசாயம் பார்க்கக் கூடிய அளவிற்கு நிலமிருந்தாலும் அவருடைய விருப்பமென்னவோ ஆடுகளை வளர்ப்பதில் தான் இருந்தது. வாரச் சந்தையை சுற்றி வந்து வேடிக்கை பார்ப்பதென்பது திருவிழா பார்பபது மாதிரியான சந்தோசமான அனுபவம். எந்த ஊர் ஜவுளிக் கடைகளிலும் பார்க்க முடியாதது துணி, மனிகள், ஆடுகள், சேவல்கள் என வித விதமாய் கலந்துகட்டி வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். சந்தை நடக்கிற இடங்களில் எப்பொழுதும் சுவாரஸ்யமான இரண்டு விஷயங்கள் சேவற்கட்டும், கடாமுட்டு என்று பொதுவாகச் சொல்லப்படுகிற ஆடு முட்டுச் சண்டையும்தான். மாநகர வார்த்தைகளில் சொல்வதனால் ஒவ்வொரு ஊருக்குமான பிரத்யேக ‘சூப்பர் மார்க்கெட்டுகள்’ இவை. ஒவ்வொது ஊரின் சந்தைக்கும் ஏதாவதொன்று ஸ்பெஷல் என்பது மக்களின் அபிப்பிராயம். அப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு நம்பப்படுகிற அபிப்பிராயங்களின்படி நண்பர் ஊரின் சந்தையில் ஆடுகள்தான் பிரதானமும், பிரமாதமும்.


‘வரலாற்றுச்’ சிறப்புமிக்க அந்தச் சந்தையில்தான் பல மணி நேரேமாய்த் தேடியும் அவர் எதிர்பார்த்தமாதிரியான ஒரு ஆட்டினை எங்களால் வாங்க முடியவில்லை. முந்தைய இரவில் உண்ட உணவின் செரிமான நேரம் முடிந்துபோய் நீண்ட நேரேமாகி விட்டிருந்ததால் வயிற்றுக்குள்ளிருந்து அலாரம் எதையாது உள்ளே போடச் சொல்லி அலறத் துவங்கி விட்டிருந்தது. தண்ணீர் குடித்தால் வயிற்றுக்குள் வினோதமாக உருளுமே ஒரு ‘கொட கொட’ சப்தம் அது மாதிரியனதுதான் இந்த அலாரச் சப்தமும். ஆட்டை வாங்கியே ஆவதென்கிற நண்பரின் விடாப்பிடியில் நொந்துபோய் பொறுமையற்றவர்களாய் நாங்கள் வெளியிலிருந்த கூழ் விற்பவரை நோக்கி நகர்ந்தோம். நல்ல பசியில் மோர் கலந்த கூழ் குடிப்பதென்பது அற்புதமான விஷயங்களிளொன்று, முடிந்தவரை அது கம்மங்கூழாக இருப்பதும் தொட்டுக் கொள்வதற்கு மோர் வத்தல் வைத்துக் கொள்வதும் அழகிற்கு அழகு சேர்க்கும் விஷயங்கள். குடல்களின் வழி பயணித்த கூழின் குழுமையில் இனம் புரியாததொரு உறக்க சொரூபம் தவழ்ந்து வர தொடர்ந்து அங்கு இருப்பதா, அல்லது கிளம்பிப் போவதா என எங்களுக்குள் சந்தேகமும், மெல்லிய தயக்கமும் எழுந்த்து. சுணங்கிப் போவதா என எங்களுக்குள் சந்தேகமும், மெல்லிய தயக்கமும் எழுந்த்து. சுணங்கிப் போயிருந்த ஒரு காளையை தெளிவாக்கும் பொருட்டு பெரியவரொருவர் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீரை அதன் முகத்தில் அடித்தார். ஒவ்வொரு முறையும் தண்ணீர் அடிக்கப்படுகிற பொழுது மாடு சிலிர்த்து தன்னிலைப்படுத்திக் கொண்டது. ஆங்காங்கே கட்டப்பட்டும், அவிழ்த்து விடப்பட்டும் இருந்த ஆடு, மாடுகளின் அருமையான மூத்திர வாசணை அப்பகுதி முழுக்க காற்றில் கலந்து மணத்தது. இதில் எந்த வாசணை ஆட்டினுடையது எது மாட்டினுடையது என்பதெல்லாம் அவ்வளவு எளிதில் பிரித்துப் பார்த்துவிட முடியாது. ஆடு வாங்க வேண்டுமென நினைத்திருந்த எங்களின் எண்ணத்தினை கொஞ்சம், கொஞ்சமாய் மறக்கடிக்கச் செய்யும் பொருட்டு மூர்க்கமான வெயில் அவ்வெளி முழுக்க விழுந்து பரவத்துவங்கியது, திடீரென விழுந்த சுருங்கல் களைப் போல் சோர்வு ஒவ்வொருவரின் முகத்திலும் தீவிரமாய் படர்ந்து விட்டிருந்தது, எங்காவது உட்கார முடியுமாவென இடம் தேடி ஒரளவு மூத்திர வாசனை குறைந்திருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தோம்.


சற்றே வளர்ந்த பூனையின் தோற்றத்தில் உடல்நிலை மிகவும் சிதைந்து போய் மெலிந்து பரிதாபத்திற்குறியதாய் காட்சியளித்த ஆடோன்றை வாங்கிக் கொள்ள முடியாமாவெனக் கேட்டு பெரியவர் ஒருவர் எங்கள் முன் வந்து நின்றார். அது ஆடுதானாவென்பதே எங்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய சற்தேகம். எந்த நம்பிக்கையில் அதனை நாங்கள் வாங்குவோமென நினைத்து எங்களிடம் கேட்டாரென ஆச்சரியமாய் இருந்தது. நாங்கள் எவ்வளவோ மறுத்தும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காதவரால் ‘’ஒரு நூத்தி அம்பது ரூவா கொடுத்தா போதுந் தம்பி... ‘’என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரத்திற்குத்தான் இதையே திரும்ப சொல்ல முடியும் மனிதர் சலித்த மாதிரி தெரியவில்லை, எங்களுக்குத்தான் சில நிமிடங்களுக்கு மேல் அதனைத் தொடந்து கேட்பதற்கான திராணியில்லை. அவர் அப்படி கேட்டுக் கொண்டிருந்தது சங்கடமாகவே இருந்தாலும் அந்த ஆட்டினை வாங்க வேண்டுமென்கிற அவருடைய எண்ணத்தினை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியததாகத்தான் இருந்தது. ஏதாவதொரு வகையில் அவருக்கு சமாதானம் சொல்லி விட வேண்டுமென நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்க, பொறுமையிழந்து போனவராய் நண்பர் பணத்தை எடுத்து அவரின் கையில் கொடுத்தார். அந்த நிமிடத்தில் அந்தப் பேரியவரின் முகத்தில் பார்க்க நேர்ந்த பரவசத்தை ஒரு போதும் மறக்க முடியாது.

பெரியவர் சென்று விட்ட பின், நண்பர் வாங்கின ‘’புது’’ ஆட்டைப் பார்க்க எங்களுக்குப் பெரிய வேடிக்கையாய் இருந்தது. என்ன காரணத்திற்காய் வாங்கப் பட்டிருக்குமென நாங்கள் அதிகம் யோசித்து சிரமப்படாதபடி நாளைய பிற்பால் விருந்திற்கான பகுதியில் இதுவும் ஒன்றென அவரே கூறினார். வாயில் நுரை தள்ள கண்கள் முக்கால்வாசிக்கும் மேல் மூடிக்கொண்டுவிட்ட இதையுமா படையலாக்குவார்கள் என்கிற வியப்பு ஒருபுறம், இவர்கள் அறுக்கும் வரையிலுமாவது உயிருடன் இருக்குமாவென்கிற ஐயம் இன்னொரு புறமாய் எங்களுக்கு எழுந்தது, வலுவாக நிற்கக்கூட திராணியின்றி தடுமாறிக் கொண்டிருந்த ஆட்டின் பழைய கயிறை அறுத்துவிட்டு புதிய கயிறொன்றை கட்டி அவர் காட்டிக் கொண்டு சென்றதைப் பார்த்த பலரும் ‘’பெரிய கொங்காப் பயகலா இருப்பாய்ங்க போல ‘’ என்றுதான் கூறினார். யார் என்ன சொன்னாலும் அதனை ஆமோதித்து ஏற்றுக் கொள்வதைப் போல் நண்பர் கூச்சமின்றி அதனைக் கூட்டிக் கொண்டு நடந்தார். கிட்டத்தட்ட வீட்டிற்குக் கிளம்புவது என்ற நேரத்தில்தான் ஏதோ யோசித்தவராய் ‘’ஆட்ட சண்டக்கி விட்டா என்ன ? என்றார் நண்பர். விளையாட்டுக்கு சொல்கிறார் போலுவென்று நாங்கள் சத்தமாக சிரித்தோம் அட நெசமாத்தான்யா சொல்றேன்.. என்றவர் என்னன்னாலும் அறுக்கப் போற ஆடுதான என்று சமாதானம் சொன்னார். இனி நாங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லையெனத் தெளிவாகத் தெரிந்துவிட்டிருந்தது . இப்பொழுது எங்களுக்கு ஆர்வம், என்ன தான் நடக்கு துன்று பாப்போமே!.. போட்டிக்கு அதனைத் தயார் படுத்துகிற விதமாய் இரண்டு வாளி நிறையத்தண்ணீர்க் குடிக்க வைத்தோம் வாயிலிருந்து நுரை ஒருபுறம் வழிந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் ஆர்வத்தோடு தண்ணீர் குடித்துவிட்டு தானும் தயாரென்பதைப் போல் தலையை சிலுப்பிக் கொண்டது. போட்டிக்கு இந்த ஆட்டை நாங்கள் விப் போவதாகச் சொன்னதும் சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர். எனெனில் எதிர்த்து நின்றே ஆடுதான் அதுவரையிலும் அன்றைய தினச் சாம்பியன். அதற்கு அடையானமாய் சிலவிழுப்புண்களை பார்க்க முடிந்தாலும் உள் காயங்களைப் பற்றின புள்ளி விவரங்கள் கைவசம்மில்லை. எப்படிப் பார்த்தாலும் நூற்றி ஐம்பது ரூபாய் ஆடுதான் என்று நாங்களும் தைரியமாய் இருந்துவிட்டோம். கொசுக்குகிற வெயிலில் சட்டையெல்லாம் வியர்வையால் நனைந்து நாற்றமடித்து கொண்டிருந்தது. கசகசப்பான ஈரமும், காட்டமான வியர்வை நாற்றமும் குளித்த , குளிக்காது சக அன்பர்களின் உடலிலிருந்து எழும் கொடுமையான வீச்சமுமாய் ஆட்டுப் புழுக்கைகளின் வீச்சத்தினையும் மீறி நிரம்பியிருந்தது. பலத்த ஆராவாரங்களுக்கு மத்தியில் துவங்கிய சண்டையே அங்கிருந்த பலரும் பலகாலமாய் பார்த்திருந்தவர்கள் தானெனினும் இப்டியானதொரு ஆட்டை சண்டைக்கு விட்டுப் பார்த்திருக்க வாய்ப்பில்லை சுற்றியிருந்தவர்கள் யாவரும் உற் சாகமாய் விட்டுப் பார்திதிசுக்க வாய்ப்பில்லை சுற்றியிருந்தவர்கள் யாவரும் உற்சாகமாய் குரலெழுப்பி இரண்டு ஆடுகளையும் தயார்ப்படுத்தினர். பலருடைய ஆதரவும் நேரடியாக சாம்பியன் ஆட்டிற்குத்தான் இருந்திருந்தது என்பதோடு பந்தயப்பணஅதன் மீது தான் நம்பிக்கையோடு அதிகமாக கட்டியிருந்தனர். அவர்களின் நம்பிக்கைகளை யெல்லாம் சிதறடிக்கும் வண்ணமாய் பத்து நிமிடத்தில் சுருண்டு விழுந்தார் சாம்பியன் ஆச்சர்யமும் , அதிசயமுமாய் யாவரும் பார்த்துக் கொண்டிருக்க தேமேவென நின்று கொண்டிருந்தது நண்பரின் ஆடு, உற்சாகமாகிப் போன நண்பர் அதனை எங்களின் பார்வையில் விட்டுவிட்டு அவசரமாய் அங்கிருந்த பூக்கடையிலிருந்து ஒருமாலையே வாங்கி வந்து அதன் கழுத்தில் போட்டார். மறுநாளுக்கான மதிய விருந்திற்கான பட்டியலிலிருந்து தப்பிவிட்ட இதற்க்குப் பதிலாக சேவலொன்று மாட்டிக் கொண்டு விட்டிருந்தது.


எதிர்பாராத இந்த புதிய வரவால் அவர்களின் வீட்டிலும் குஷியாகி விட்டிந்தனர் . அதனை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வதும் தேவையான வற்றைக் கொடுத்து விழுந்து, விழுந்து. கவனிப்பதுமாய் வீட்டிலுள்ளவர் போட்டி போட்டுக் கொண்டு அதனைக் கவனித்து. கொண்டனர். எலும்பு துறுத்திக் கொண்டிருந்த வெறும் தோலுக்குள் உட்ம்பென சொல்கிற புனவிற்கு வேகமாக சதைபோடத் துவங்கி அடுத்த சில நாட்களிலேயே நம்பமுடியாக அளவிற்கு கம்பீரமாய் வந்துவிட்டிருந்தது. ஆட்டை விற்றவனிடமே கொண்டு போய் காட்டினாலும் நம்பமாட்டாத அளவிற்கு மாறிப்போயிருந்தது இதன் தோற்றம். குறிப்பிட்ட சில நாட்கள் வரையிலும் வெளியில் எங்கும் விடாமல் அதனை பராமரித்து வந்தவர் போதுமானளவு அதன் வளர்ச்சியும் தோற்றமும் மாறியபின் புதுவகையான தெம்போடு தன் வீட்டின் மல்யுத்த வீரனை யுத்த களத்திற்க்கு அனுப்பத் தயாரானார். ஒரு பிடிப்பிற்காக அதற்கு கருப்பு என்று பெயர் வைக்க பெயருக்கேற்ற தோற்றமா? அல்லது தோற்றத்திற்கு ஏற்ற பெயரா? என கேட்கும் படி மிகப் பொருத்தமாய் இருந்தது அப்பெயர் தான் தாற்போதிருக்கும் சூழலை உணர்ந்தோ உணராதவாறோ பெருமிதத்தோடு உலவிய அதனை கருப்பு வென அவர் கூப்பிட்டால் குடுக்கும் கட்டளைக்குக் கட்டுப்படும்படி பழக்கிவிட்டிருந்தார். முதல் தடவையாக கருப்பு வென்ற அதே இடத்திலேயே அதன் மறுபிரவேசம் புத்துணர்ச்சியோடு துவங்கியது. முன்பு வதங்கிப் போய் அந்தக் களத்திலிருந்து சென்று ஆடு இன்று அபரிமிதமான கம்பீரத்தோடு வந்து நின்றிருப்பதை பார்த்த ஒருவராலும் நம்பியிருக்க முடியவில்லை, அது பழைய நூற்றி ஐம்பது ரூபாய் ஆடு என்பதை நண்பரின் பராமரிப்பினைப் பற்றி தங்களுக்குத் தெரிந்திருந்த தகவல்களை எல்லாம் பரிமாறிக் கொண்டு பெருமை பொங்கல் பேசினர்.


அந்தப் பெருமிதங்களையும் நண்பரையும் பொய்யாக்கிவிடாதவாறு அன்றைய தினம் கருப்பினுடைய தினமாகவே இருந்தது, அன்றைய தினம் என்றில்லை, அதன் பிறகு கருப்பு பந்தயத்தில் கலந்து கொண்ட பல தினங்களும் அகற்குரியதாகவே இருந்தது. தான் வளர்த்த ஆடுகளை எல்லாம் தம்பியின் நேரடிப் பார்வையில் விட்டுவிட்டு முழுக்க முழுக்க அவர் பந்தயங்களுக்குக் கூட்டிப் போவதிலேயே கவனம் செலுத்தினார். ஒவ்வொரு விஷயத்திலும் அமர் மேற்கொண்ட காத்திருப்பிற்கும் அசாத்தியமான பொறுமைக்கும் காரணம் இயல்பாகவே ஆடுகளைப் பராமரித்து வளர்பதற்கு நிறைய பொறுமை வேண்டுமென்பதுதான். பல காலமாக ஆடுகளுடனேயே இருந்தவரால் மிக எளிதாக அதன் வளர்ப்பு முறைகளுக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்ள முடிந்தது. வழக்கமாக பட்டிகளில் வளர்க்கிற ஆடுகளைப் போலில்லாமல் இதனை சுதந்திரமாக உலவவிட்டிருந்தார். எதிர்பாராத இது மாதிரியான வரவுகள் நிறைய குடும்பங்களில் பெரும் சந்தோசம் ஏற்படுவதற்கும் சில நாட்களிலேயே கருப்பு வீடு என அடையானம் சொல்லுமளவிற்கு இதந் வெற்றிகள் சுற்று வட்டாரத்தில் பிரபலமாயின. குறுந் செய்திகள், மின்னஞ்சல் கார் மூலமாக தகவலனுப்பாதது ஒரு குறையென்றால் தொலைக்காட்சியின் விளையாட்டுச் செய்திகளில் செய்திகளில் சொல்லாமல் போனது சற்று வருத்தமான விஷயம் தான்.


மரணத்தை விடவும் பெரிய சாதனை என்னவாயிருக்கு முடியும்? பல ஊர்களுக்கும் சென்று வெற்றியோடு இவர்கள் திரும்பிய வருகையில் அந்த வீட்டிற்குத் திருவிழாக்களை வந்துவிடும். இதுமாதிரி பந்தயங்களுக்கு ஆடுகளை விடுவது சிலருக்கு வருமானம் சார்ந்த விஷய மென்றால், சிலர் தங்கள் கௌரவத்திற்காகவும் சண்டைக்கு விடுவதுண்டு,. இதில் வருகிற வெற்றியோ, தோல்வியோ இரண்டுமே மிக முக்கியமான விஷயம் , சிறு சிறு சச்சரவுகளில் துவங்கி சில சமயம் பெரிய வன்முறையளவிற்கு வளரக் கூடிய தருணங்கள் எல்லாம் வெகு சாதாரணமான நிதழ்வுகள் இப்படி கௌரவத்திற்காக ஆடுகளை சண்டைக்கு விடும் வழக்கம் மதுரையிலிருந்த பெரும் தொழிலதிபர் ஒருவருக்கு இருந்தது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என அவருடைய ஆட்டிற்கு சிறப்புப் பெயர் வைத்துக் கூப்பிடுமளவிற்கு அதுவு பிரபலான வீரன்தான்,. கருப்பினுடைய போர்த் திறன்களைப் பற்றிக் கேள்விப்பட்ட தொழிலதிபர் இரண்டு ஆடுகளுக்குமிடையில் போட்டியொன்றை நடத்திப் பார்க்க விரும்புவதாக ஆளனுப்பி நண்பரிடம் பேசப் செய்தார். முதலில் சற்றுத்தயங்கிய நண்பர் சில நாட்கள் யோசனைக்குப் பின் சம்மதம் சொல்லிவிட்டார். பந்தயத்திற்கான தேதியும் , யுத்த களமாக தமுக்கம் மைதானமும் குறிக்கப்பட்டுவிட்டது. நண்பரை உற்சாகப்படுத்த இரண்டு வேன்கள் நிறைய உள்ளன் ஆட்கள் திருவிழா பார்க்கச் செல்கிற பரவரத்தோடு கிளம்பி வந்தனர். எதிர்த்தரப்பும் சாதாரணமானவர்கர்களில்லை என்பதால் அங்கும் கூட்டத்திற்குச் குறைவில்லை , பெருந்தொகை பந்தயம் பணமாய்ச் பேசப்பட்டதுடன் வெற்றி பெற்ற பின் சண்டை சச்சரவுகள் எதுவும் வந்து விடக் கூடாதென்பதிலும் எச்சரிக்கையாய் இருந்தனர், போட்டிக்காக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த இரண்டு வீரர்களும் எதிரெதிர்த் திசையில் நீண்ட தூரத்திற்கு தள்ளி நிறுத்தப்பட்டிருந்தனர். அனல்காற்று அடித்துக் கொண்டிருந்த தினமது, வெக்கையும், புழுதியுமாய் முட்டுவதற்கு இரண்டு ஆடுகளும் ஒடத் துவங்கின. இரண்டு பாறைகளை பெரும் விசையோடு மோத விட்டதைப் போல் ஆடுகளிரண்டும் மோதி மீண்டும் பின்னகர்ந்தன. மூர்க்கமான இந்த யுத்தத்தில் கருப்பினுடைய வலிமையான முட்டுக்களை பொறுக்க மாட்டாமல் எதிராளி சில நிமிடங்களுக்குள்ளாகவே சுருண்டு விழுந்தது. வந்திருந்த ஊர்க்காரர்களெல்லாம் ஊரின் பெருமையை தூக்கி நிறுத்திய மகிழ்ச்சியில் உற்சாகமாக கடச்சல் எழுப்பத் துவங்கிவிட்டனர். எதிர்பாராமல் நிகழ்ந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எதிர்த்தரப்பு ஆட்கள் , நண்பரிடம் பேச்சு வார்த்தை நடத்தி எவ்வளவு பணமென்றாலும் உடனடியாக அதனை வாங்கிக் கொள்வதாகக் கூறினார். எவ்வித சலனமுமில்லாமல் இவர் வழக்கம் போல் அதற்கு மாலையைப் போட்டு ஊருக்குக் கிளம்பத் தயாராகிவிட்டிருந்தார். தொடர்ந்து சில நாட்கள் கருப்பை வாங்கி விடுவதற்காக தொழிலதிபர் காட்டிய தீவிரத்தை எந்தவிதத்திலும் நண்பரோ, நண்பரின் குடும்பமோ சட்டை செய்யவில்லை. பந்தயத்திற்கு அனுப்பிது போதுமென முடிவுக்கு வந்தவர்கள் அதன் பிறது மிகச் சுதந்திரமாக அதனை சுற்றவிட்டனர். அந்த ஊரிலிருந்த எல்லா வீடுகளுக்கும் செல்லப் பிள்ளையாய், சிறுவர்களுடன் விளையாடவும் செய்த அதனை துரதிர்ஷ்டவசமாய், ஓரு நாள் ஸார்ப்பம் தீண்டிவிட்டிருந்தது. முதல் நான் இதனை கவனிக்காதவர்கள் உடல் சுனங்கி வாயில் நுரை தள்ளத் துவங்கியதும்தான் அடித்துப் பிடித்து அதனை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். உயிர் பிழைக்க வைத்ததைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியாத அளவிற்கு அதனுடைல் அடுத்தடுத்த நாட்களில் உருக்குலைந்து போய்விட்டிருந்தது. போர் வீரனாகப் பார்த்ததை இப்படி பார்க்கிற மனதைரியமில்லாமல் தன் வயற்காட்டிலேயே கால்வாசி உயிருடனிருந்து அதனைப் புதைத்தனர். அதன்பிறகு ஆடுகள் வளர்ப்பதையே விட்டுவிட்ட அந்தக் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் வந்த சிறு தெய்வமாகவே இன்னும் அதனை வணங்குகின்றனர். ஜீவகாருண்யம் பற்றின எவ்வளவோ கதைகளை பாடப்புத்தகங்களில் படித்துப் பார்ப்பதனை மட்டுமே இன்றைய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அபூர்வமாய் சிலர் இன்னும் சக உயிர்களின் மீதான காதலையும், நேசத்தையும் அர்த்தமுள்ளதொன்றாக மதிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக