Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

புதன், 17 பிப்ரவரி, 2010





சொற்களுடன் கழிந்த சில நாட்கள்


ஊரில் எல்லோருக்கும் தெரிந்த ஆள் அவன் ஒரவனாக மட்டும் தான் இருக்கமுடியும். வெள்ளாகுளத்தில் அவனைத் தெரியாமலிருப்பர்கள் ஒன்று வெளியூர்க்காரர்களாக இருக்க வேண்டும் . அல்லது அவ்வப்பொழுது ஊருக்கு வந்து போகிற அரசு சம்பந்தப்பட்ட ஆட்களாக இருக்க வேண்டும். ‘எச்சிதுப்பி’ யென அவனுக்கு பெயர் வந்ததெப்படியென ? யாரிடமாவது கேட்டால் அவ்வளவு தெளிவாக யாராலும் காரணம் கூறிவிட முடியாது. அந்த பெயர் வந்து தொலைத்ததா என ஆராய்வது சற்றேறக் குறைய அனுமார் வாலாய் நீள்கிற கதைதான். வயது நிச்சயமாக முப்பதைத் தாண்டது என்றுதான் முதல் பார்வையில் தோன்றும். ஆனால் ஏழு கழுதை வயதாகித் திரிகிற நாயது. ஏழு கழுதை வயதென்றால் கழுதைக்கி எத்தனை வயதென நீங்கள் கெட்பது புரிகிறது, கதைக்கு கழுதைதான் முக்கியம் கழுதையின் வயதல்ல , மொத்தமாக நாற்பது,நாற்பத்தைந்து கிலோவைத் தாண்டாது அவனுடல், சுருங்கிய காகிதம் போல்ஆளே வினோதமான தோற்றத்திலிருப்பான். சிலர் அவனை மனநோயாளியேன்றும் இன்னும் சிலர் ஞானக்கிறுக்கனென்றும் சோல்வார்கள், ஆனால் இரண்டுமே, இல்லாதவனேன்றுதான் எனக்குப் படுகிறது.


அந்த ஊரிலிருந்த கிரஷ்ஷரில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. பெரிய ஆபிசர் வேலையொன்றுமில்லை, கணக்கு , வழக்குகளை எழுதிக்கொண்டு மற்றவர்களுக்கு வேலை பிரித்துக் கொடுக்கிற கூப்பர்வைசர் வேலை ஊர்க்காரர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் கணக்கப்பிள்ளை, ஸஅந்தக் கண்றாவிக்கு இதுவொன்றுதான் குறைச்சல், ] வேலையொன்றும் பெரிதாக இருக்காது. காலையில் ஒரு மணி நேரம், மாலையில் அரைமணி நேரம் இடைப்பட்ட நேரத்தில் காட்டுக்குள் சுற்றிக் கொண்டிருப்பதும், புஸ்தவம் படிப்பதும் தான் பிரதான வேலை. ஒரே சிக்கல், கிரஷ்ஷருக் செல்வதற்கு இந்த ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர நடக்க வேண்டும். இந்தப் பக்கமுமில்லாமல் , அந்தப்பக்கமுமில்லாமல் இரண்டு ஊர்களுக்கு இடையில் ஒளிந்து கிடந்தது கிரஷ்ஷர். காரணமில்லாமலில்லை அது சற்று விலாவரியாக சொல்ல வேண்டிய சமாச்சாரமென்பதால் தனியாக இன்னொரு பகுதியில் எழுதுகிறேன். வந்த விஷயம் எச்சித் துப்பியைப் பற்றி முதல் நாள் பேருந்தைவிட்டு இறங்கி கிரஷ்ஷர் செல்வதற்கு ஒரு பெருயவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னாலிருந்து ஒடிவந்தவன் ‘த்தூ’ ‘ த்தூ’ என துப்பத் துவங்கி விட்டான் , என்ன ஏதென்று நீ பார்க்க திரும்பிய போழுது சி துளிகள் என் முகத்திலும் பட்டுவிட்டது , எனக்குக் கொஞ்சமும், கூடவே இதென்னாடா வம்பென்று பயமும் ஒருசேர வந்துவிட்டது , அதற்குள்ளாக அருகில் நின்றிருந்த பெரியவர் மண்டையில் ரெண்டு தட்டு தட்டி அவனை வீட்டுக்குப் போகச் சொன்னா. தப்பா எடுத்தக்காதீய தம்பி கிறுக்குப்பய.... என்றார் தடுமாறி, தடுமாறி அவன் பேசியதில் போர்வையின்றி வார்த்தைகள் வந்து விழுந்தன. என்னதான் விஷயமென்று தெரிந்து கொள்வதற்கு வலியதொரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு நான் அவனை நெருங்கினேன். வார்த்தைகளும் எச்சில்த் துளிகளும் ஒரசேர அவன் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன டிரான்ஸ்பாரம் டிரான்ஸ்பார மென இடையிடையே அவன் சுட்டிக் காட்டியது காட்டுக்குள் புதிதாய் முளைத்திருந்த அலைபேசி கோபுரத்தை .


ஊர்க்காரர்களுக்கு அவனுடைய பிரத்யேகமான மொழி நன்றாகவே பழகிவிட்டிருந்தது போலும் பெரியவர் சிரித்துக் கொண்டே செல்ஃபோன் வர வெச்ச கம்பெனியிலிருந்து வந்திருக்கீங்களோன்று, நௌச்சுத் திட்டறான் தம்பீ... என்றவர் அவனுக்கு நான் அந்த ஆளில்லை என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியும் கூட திருப்தியுநாதவனாய் ‘த்தூ’ ‘த்தூ’ என்று துப்பிக்கொண்டிருந்தான் . முதல்நாள் என்பதால் நீண்ட நேரம் அவரோடு பேச முடியாதவனாய் நான் விறுவிறுவென்று கிருஷ்ஷரைப்பார்த்து நடக்கத் துவங்கிவிட்டேன்.


அன்று பிற்பகலில் உணவு நேரம் முடிந்த பிறகு அந்ந ஊரிலிருந்து வேலைக்கு வருபவர்களிடம் மெதுவாக அவனைப் பற்றி விசாரித்தேன். போதுவாக எந்த வேலைக்குப் போனாலும், அது என்ன மாதிரியான வேலையாயிருந்தாலும் உடன் வேலைபார்ப்பவர்களுடன் மிக வேகமாக பேசிப்பழகி விடுவேன் . அதுவும் இதுமாதிரியான இடங்களென்றால் மட்டற்ற சந்தோசமிருக்கும் , யாரைப் பாத்தும் பயப்படவோ, சங்கடப்படவோ தேவையிருக்காது. வந்த முதல் நாளே அவனைப் பற்றி ஊர்க்காரர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்திருக்கும். பிறகு அன்று காலையில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறிய போழுது அத்தனை பேருக்கும் நிலைகொள்ளாத சிரிப்பு. வந்ததும், வராததுமா நல்ல ஆசிர்வாதம்ப்பா உனக்கு, அதுக்கும் ஒரு கொடுப்பின வேணும்ல... என முடிந்தவரை கிண்டலடித்தார்கள். பொதுவாக அவனை வெறும் கிறுக்குப்பயப்பா.. என்றுதான் மற்றவர்கள் சொன்னார்கள் அந்த அலைபேசி கோபுர விஷயத்தைச் சொல்லி கேட்ட பொழுதுதான், அலைபேசி கோயுரமிருக்குமிடம் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான வயல் என்று தெரிந்தது. துவக்கம் முதலே அது அவனுக்குப் பிடிக்காது, வீட்டிலிருப்பவர்கள் இவனுக்கென்ன வந்தது என்று இவனைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பணம் கிடைத்தால் சரியென்று ஒப்புக்கொண்டனர் கோபுரம் வைக்கும் பொழுதே அவன் அடிக்கடி அங்கு போய் இம்சையேக் கொடுக்கிறானென சில நாட்கள் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கின்றனர். தபாவம், தனியாக அவன் அழுது தீர்த்ததுதான் மிச்சம். பிறகு வேலையெல்லாம் முடிந்து அவனை வெளியே விட்டபின் ஊருக்குப் புதிதாக வருபவர்கள் இவன் கண்ணில் பட்டு விட்டான் இந்த மரியாதைதான். ஒருவேளை, இந்த அலைபேசி கோபுரம்தான் அவன் மனநிலை பாதிக்கப்படுவதற்குக் காரணமோவென்று இப்பொது நீங்கள் நினைக்கிற மாதிரிதான் சில நொடிகள் நானும் நினைத்திருந்தேன், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சிறு வயதிலிருந்தே அவன் அப்படித்தான். ஒரே நாளிலேயே அவன் உருவமும், குரலும் செய்கைகளும் அழுத்தமாக எனக்குப் பதிவாகிவிட்டிருந்ததது.


நான் கலையில் வேலைக்கு வரும் பொழுது என்னருகில் வந்தமர்ந்த பெண் முந்தைய தின சம்பவத்தை சொல்லிக் காட்டி சிர்த்தாள். முப்பத்தைந்து வயதிருக்கும், இந்த வயதுப் பெண்கள் சற்று சுமாராக இருந்தாலே நிதானமாக ரசிப்பவனென்பதால் அவனை பேசவிட்டுவிட்டு நானும் சிரித்தபடியே அமைதியாக இருந்தான். அணிந்திருந்த உடை, வேறண்ட் பேக் இதெல்லாம் கவனித்து அவவூர்ப் பற்றிக் கூடத்தில் பணிபுரியும் ஆசிரியேயென்ற தான் நின்த்தேன். ஸகையில் குடை வைத்திருந்ததாக நினைக்கவில்லை]. பெரும்பாலான சமயங்களில் என் கணிப்புகள் தவறாகத்தான் இருக்கிறது. அவன் அவவூர் தபால் அலுவலகத்தில் வேலை பார்ப்பன். சம்பம் நடந்த இடத்தை ஒட்டியிருந்த கைப்பிடியளவு கட்டிடம் தான் தபால் அலுவலகம் என அவன் சொல்லித்தான் தெரிந்தது. அவளும் சில நாட்களுக்கு முன்பாகத் தான் அங்கு வேலைசேர்ந்திருக்கிறாள் என்னை மாதிரியேஅவளுக்கும் நம்மாள் ஆசிர்வாதம் வழங்கியிருக்கிறாள். பிறகு பேருந்தை விட்டு இறங்குகிற வரையிலும் அதைப்பற்றித்தான் விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தாள். பெண்களால் மட்டும் தான் ஒன்றுமேயில்லாத விஷயங்களைக் கூட விலாவாரியாக பேச முடியும் போல, அதற்காக கேட்டுக் கொண்டிருப்பவனின் காதில் இரத்தம் வருவம் வரை விடாமலிருந்தாள் bப்படி? சுப்புலட்சுமி என்று பெயரை பிரிகிற நேரத்தில் அவள் சொன்னதுதான் கொஞ்சம் அழகான அவளை இன்னும் அழகானவளென உணர்த்தியது . இரண்டு பேரும் அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தினோம் ஸஅவளுடைய அக்கவுண்ட்டில்தான் அதன் பிறகு பல நாட்கள் தேநீர் குடித்ததும் அவள் உபாயத்தில்தான்.] இன்று பார்க்க முடியுமாவென சில நிமிடங்கள் நின்று பார்த்தேன். வாய்ப்பில்லை, அதன் பிறகு இரண்டு மூன்று நாட்களும் பார்க்க முடியாமலே இருந்தது. இன்னொரு புறம் இரண்டாவது நாளிலேயே சுப்புலட்சுமியின் கொடுமையே என்னும் சில நிமிடங்களுக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாததால் பெரும் பாலும் நகர்ந்து விடததான் பார்ப்பேன். சில நிமிடங்களேனும் அவள் பேசுவதை கேட்க வைப்பதற்கென அவள் மேற்கொள்ளும் யுத்திதான் தேநீர் அருந்தக் கூப்பிடுவது, மிகுந்த சிரமப்பட்டு தன்னை புத்திசாலியாக காட்டத்துடிக்கும் சுபாவம் அவளுக்கு, ஒரே நேரத்தில் சீரியல்களைப் பற்றியும், ஏதாவதொரு பத்திரிக்கை செய்தியைப் பற்றியும் மாறி, மாறி, பேசுவாள்.


நாட்களுக்கு பின்பாகத்தான் அவள் கிரைம் நாவல்களின் தீவிரமானதாக என்பது தெரிந்தது. எப்படியாவது என்னையும் கிரைம் நாவலின் தீவிர வாசகனாக்க வேண்டுமென முயற்சித்தாள். வம்புக்கென்றே நூலகத்திலிருந்து ஒருநாள் கால்வினோவின் குளிர்கால இரவில் ஒரு பயணி நாவலை எடுத்துக் நல்ல புத்தகமென படிக்கக் கூடுத்தேன். நான் வாசித்திருக்கவில்லை என்பது வேறு விஷயம், அடுத்தநாள் வந்து புத்தகத்தைக் கொடுத்தவள், அதன் பிறகு கிரைம் நாவல்களைப் பற்றிப் பேசுவதைத் குறைத்துக் கொண்டாள்.


சமாச்சாரம் வேறெங்கோ திசைமாறிவிட்டதோ. பெண்களைப் பற்றி எழுதத் துவங்கிட்டு அவ்வளவு எளிதில் எப்படி பேனாதிரும்பி வரும்? இரண்டு, மூன்று தினங்களுக்குப் பின் அவனை பார்க்க நேர்ந்தது காட்டுப்பாதையிலிருந்த ஒரு நெல்லிக்காய் மரத்தடியில் அவன் நின்றிருந்த பொழுதுதான். என்னைப் பார்த்தும் வேகமாக ஒடி வந்தான். மறுபடியும் எச்சில் துப்பத்தான் போகிறானோ வென்று எனக்குப் பயம், இன்னொரு புறம் ஒடினா பையிலிருக்கும் சோறு, குழம்பு எல்லாம் கொட்டிவிடுமென்பதால் வழியின்றி அப்படியே நின்றேன்.அருகில் வந்ததும் அவன் சிரித்தப்பிறகுதான் சற்று ஆசுவாசமாக இருந்தது கை நிறைய அரை நெல்லிக்காய்களை அள்ளிக் கொடுத்தவன் சிரித்தபடியே மீண்டும் மரத்தடிக்கு ஒடிவிட்டான். அவன் இயல்பு எதுவெனத் தெரியாமல் குழப்பத்துடனும், சற்று நிம்மதியுடதும், நான் நடக்கத் துவங்கினேள். எங்கே அடுத்த நாள் இதைப்பற்றி சுப்புவிடம் சொன்னால் அதற்கும் மிகப்பெரிய கதையொன்றைச் சொல்லி விடுவாளோ என்று பயந்து சொல்லிக் கொள்ளவில்லை. அடுதடுத்த சந்திப்புகளில் எனக்கும் , அவனுக்குமான சுவாரஸ்யமான அவனைப் போன்று மாறியிருக்க வேண்டுமென நான் சமாளித்தேன். பார்த்தால் ஊரே அவனைப் போன்று மாறியிருக்க வேண்டுமென நான் சமாளித்தேன். அவ்வப்பொழுது என்னைத் தேடி கிரஷ்ணருக்கும் வந்து வருவான் ,கிரஷ்ஷரிலிருந்தவர்கள் இதென்னங்கடா கூத்து? என சிரித்துக் கொள்வார்கள், அடிப்படையில் அவன் சாதாரணமானவன் தான். ஆனால் மற்றவர்களுக்குத்தான் சில நிமிடங்களுக்கு மேல் அவனைத் தொடர்hமலோ, அடிக்காமலோ அவனிடம் பேசமுடியாது. அப்படி இம்சித்தால் மட்டும் தான் அவன் எச்சி துப்புவது, அவனை எச்சில் துப்ப செய்து வேடிக்கை பார்பற்கென்றே ஆட்கள் சீண்டிக் கொண்டிருப்பார்கள். அவனுக்காகவே மாலை நேரங்களில் தாமதமாக வீட்டிற்குப் போக நேர்ந்தது. அந்த சின்ன ஊருக்கு ஏராளமான வழிகளை அவன் உருவாக்கி வைத்திருந்தான், வேலை முடிந்து அவனோடு திரும்பினால் தினம் ஒரு பாதையில் கூட்டிச் செல்வான் அது அவனுக்கு மட்டுமே வாய்த்ததென்பதால் தனியாக நான் ஒருபோதும் முயற்சித்ததில்லை . ஊர்க்கார்ர்களுக்கு என்னை நன்றாகத் தெர்ந்திருந்தது. இன்னொரு வகையில் என்னையும் அவளின் பிரதியாகத்தான்.


ஊரில் திருவிழா போட்டிருந்தார்கள். கிராமத்துத் திருவிழாக்கள் எப்பொழுதுமே வசீகரமானவை. எந்த ஊர், யார் வீட்டுக்கு வந்த சொந்தமென எவ்விதமுமான பாகுப்பாடுமிருக்காது . ஊருக்குள் வருகிற எல்லோருமே விருந்தாளிகள் தான் கிரஷ்ஷரில் பண்புரியும் ஆப்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் அவன்தான் கூட்டிப் போனான். எங்கு போனாலும் அவர்கள் வீட்டிற்குத் அவன்தான் கூட்டிப் போனான். எங்கு போனாலும் அவர்கள் வீட்டிற்குத் தான் சாப்பிடச் செல்ல வேண்டுமென அவன் அம்மா கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார். நான் சுப்புவையும் அழைத்திருந்தேன். நாங்கள் சாப்பாடையெல்லாம் முடித்த பிறகு வந்த சுப்பு அவர்களோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கணவர் பையனென அன்றும் என்னை வதைக்கத் துவங்கி விட்டாள். வழியே இல்லமல் அன்றைய பிற்பகல் முழுக்க ஊரைச் சுற்றி வந்த படி அவள் பேசுவதையெல்லாம் கேட்க வேண்டியதாகிப் போனது. அவள் எவ்வளவு பேசினாலும் நான் கோபித்துக் கொண்டதில்லை அதன் பிறகு சில மாதங்களிலேயே அந்த வேலையிலிருந்து நான் விலக வேண்டியதாகிவிட்டது. மன்னிக்கவும், விலக்கப்பட்ட வேண்டியதாகிப் போனது, பணியில் என் அசிரத்தையென முதலாளிகள் காரணம் கூறியனார்கள். எனக்கு எப்பொழுதும் போல் அதில் வருத்தமுமில்லை, மகிழ்ச்சியுமில்லை, அடுத்த வேலையைத் தேடத் துவங்கி விட்டேன். முன்பே சொன்னபடி கிரஷ்ஷரைப் பற்றின உண்மையான சமாச்சாரங்களை இன்னொரு பகுதியாக எழுதுகிறேன். ஒவ்வொரு முறையும் இது மாதிரி யணி மாறுகிற சமயங்களில் உடன் பணிபுரிகிற நண்பர்களைப் பிரிவது சற்று வருத்தமான விஷயம்தான், என்றாலும் இதையெல்லாம் தடுக்க முடியுமா என்று?


அதன்பிறகு கூட அவ்வப்பொழுது வெள்ளாகுளம் போய் வருவது வழக்கமாகத் தானிருந்தது சென்னை வந்ததும் நீண்ட இடைவெளி மட்டும்ப் போக, பெரிதாக அப்வூருடன் தொடர்புகளில்லை சில நாட்களுக்கு முன்பு ஒரு முறை போய் வரலாமென சென்றிருந்தேன் அவனுக்கு அவ்வளவு சந்தோசம். மாலை ஊருக்குக் கிளம்புகிற வரை என்னுடனேயே இருந்தான். பழைய அலைபேசி நான் மாந்நியிருந்ததால் எப்பொழுதாவது அலைபேசும் சுப்பவும் தொடர்பில் இல்லாமல் இருந்தாள் நேரில் சந்திக்கையில் புதிய எண்ணைத் தராததற்காய் என்னிடம் கோபித்துக் கொண்டவள் அத்தனை நாட்களுக்குமாக சேர்த்துப் பேசினாள். எப்பொழுதும் போல் நான் சிரித்துக் கொண்டிருந்தேன் நான் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை, நிச்சயமாக ஒரேயொரு கிரைம் நாவலாவது எழுதிவிடுவேனென அவளை சந்தோசப் படுத்துவகற்க்hகக் கூறினேன். அவளும் சிரித்தபடியே அதுக்கெல்லாம் கொஞ்சம் அறிவு சரியாக சொல்ல முடியவில்லை, யாருக்காக வென்று உங்களுக்குப் படுகிறதோ அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக